மதுரையைச் சேர்ந்த பரணி குமார் மற்றும் விஜய லாவண்யா தம்பதியினர் சேலத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளனர். இருவரும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் உரிமையாளர் போல் பேசி, புதியதாக தொடங்கப்படும் ஹோட்டலில் பங்குதாரராகச் சேர்ப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். இச்சம்பவத்தில் சேலம் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.