மக்களுடன் முதல்வர்: குத்துவிளக்கு ஏற்றி தொடக்கம்

73பார்த்தது
மக்களுடன் முதல்வர்: குத்துவிளக்கு ஏற்றி தொடக்கம்
கூடமலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இன்று 'மக்களுடன் முதல்வர்' முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், குத்து விளக்குயேற்றி தொடங்கி வைத்தார். இதில், வட்டார கிராம வளர்ச்சி அலுவலர் மற்றும் 15 துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். இதில், 74 கிருஷ்ணாபுரம், கடம்பூர், 95 பேலூர், கூடமலை பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைளை மனுக்களாக வழங்கினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி