கொங்கணாபுரம் வாரச்சந்தையில ரூ. 3-கோடிக்கு ஆடுகள்விற்பனை

636பார்த்தது
கொங்கணாபுரம் வாரச்சந்தையில் இன்று 2000 ஆடுகள் ரூபாய் மூன்று கோடிக்கு விற்பனை.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பேரூராட்சியில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை கூடி வருகிறது. இச்சந்தைக்கு சேலம், நாமக்கல் , தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களிலிருந்து ஆடுகளை கொண்டு வந்து வியாபாரிகளும் விவசாயிகளும் விற்பனை செய்து வருகின்றனர். இன்று அக்டோபர் 7ஆம் தேதி கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கு 3500 ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 3500 ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த நிலையில், 2000 ஆடுகள் விற்பனையானது. ஆடு ஒன்று சராசரியாக எடைக்கு தகுந்தார் போல் ரூபாய் 5000 முதல் ரூபாய் 18 ஆயிரம் வரை விலை போனது. இன்று கொங்கணாபுரம் வாரச்சந்தையில் 2000 ஆடுகள் ரூபாய் மூன்று கோடிக்கு விற்பனையானதாக சேலம் மாவட்ட ஆட்டு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி