சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சித்தூர் பகுதியில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்தார். தொடர்ந்து அவர் அப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற படவெட்டியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து சித்தூர் பகுதியில் உள்ள கல்யாணசுப்பிரமணியர் கோயிலுக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அங்கு சாமி தரிசனம் செய்தார். எடப்பாடி - சேலம் பிரதான சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர், அங்கு அ.தி.மு.க நகர, ஒன்றிய பகுதி நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சி குறித்தும், தேர்தல் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.