சேலம்: திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்த எம்.பி

58பார்த்தது
சேலம்: திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்த எம்.பி
சேலம் மாவட்டம் தேவூர் சந்தைப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பேரூர் தி. மு. க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட செயலாளர் டி. எம். செல்வகணபதி எம். பி. தலைமை தாங்கி நீர்மோர் பந்தல் திறந்து வைத்தார். 

தொடர்ந்து அவர், பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், கரும்பு சாறு, நூங்கு, மோர், வெள்ளரிக்காய் ஆகியவற்றை வழங்கினார். இதில் சேலம் மேற்கு மாவட்ட தி. மு. க. அவைத்தலைவர் தங்கமுத்து, மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார் மற்றும் தேவூர் பேரூர் செயலாளர் முருகன், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், வார்டு செயலாளர்கள், இளைஞரணி, மகளிர் அணியினர், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி