சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், இளம்பிள்ளை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் அரசு துவக்க பள்ளியில் வருகிற 10 -ம் தேதி திங்கட்கிழமை அன்று ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம் முகாமில் இது வரை ஆதார் எடுக்காமல் இருக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆதார் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.