தொடர் சுபமுகூர்த்தத் தினத்தையொட்டி, சேலம் மாவட்டம், ஆத்தூர் உழவர் சந்தையில் ஏராளமானோர் காய்கறிகளை வாங்க குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. கேரட், தக்காளி, அவரைக்காய், முருங்கைக்காய் என 51 டன் அளவிலான காய்கறிகள்விற்பனையாகின. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.