சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட முட்டல் கிராமத்தில் சுற்று சூழல் திட்டத்தில் முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
கல்வராயன் மலைத்தொடர் பகுதியில் அடிவாரப் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சேலம் மட்டுமல்லாமல் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் வனத்துறை பராமரிப்பில் முட்டல் ஏரி பகுதியில் சுற்றுலா பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் விளையாட மான், யானை, உள்ளிட்ட கண் கவர் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விடுமுறை முன்னிட்டும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க பல்வேறு பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் தற்போது குடும்பத்தார்களோடு உற்சாக குளியலிட்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள பூங்கா பகுதிகளிலும் கண்டு ரசித்தும், குழந்தைகள் விளையாடியும் , படகு சவாரி செய்தும் வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.