தலைவாசல் அருகே வீரகனூர் சுவேத நதிக்கரையில் உள்ள கங்கா சவுந்தரேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக நந்தீஸ்வரருக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், தயிர் ஆகியவற்றால் சிறப்பு அபி ஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சவுந்தரேஸ்வரர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் வீரகனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக் தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் தலைவாசல் கைலாசநாதர் கோவில், ஆறகளூர் காமநா தீஸ்வரர் கோவில், பெரியேரி தான்தோன்றீஸ்வரர் கோவில், சிறுவாச்சூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில், தேவி யாக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவில் என மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.