சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மஞ்சினி பகுதியில் தனியார் கூல்ட்ரிங்ஸ் கடையில் குளிர்பானங்களோடு தண்ணீர் பாட்டில்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த கடையில் அவ்வழியாக சென்ற ஒருவர் தாகத்திற்காக தண்ணீர் பாட்டிலை குடிப்பதற்காக வாங்கியுள்ளார். அப்போது தண்ணீர் பாட்டிலில் புழு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் தண்ணீரும் தரமற்ற முறையில் இருந்ததால் இது குறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது நாங்கள் வாங்கி விற்கும் சிறு வியாபாரி என கூறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த நபர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.