சேலம் உடையாப்பட்டி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் சேலம் மின் பகிர்மான வட்டம், பொது கட்டுமான வட்டக் கிளை சார்பில் நிரந்தர ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மின்ஊழியர் மத்திய அமைப்பு நடத்தும் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் காலி பணியிடங்களை நிரப்புதல் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.