அரசந்ததம் மக்களுடன் முதல்வர்சிறப்புமுகாம் அமைச்சர் பங்கேற்பு

55பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அரசநத்தம், பனைமடல் உள்ளிட்ட ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வி. கணேசன் பங்கேற்றார். அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று அதற்கான தீர்வை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர். விழாவில் அமைச்சர் சி. வி. கணேசன் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி உள்ளிட்டவைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ஒவ்வொரு துறை சார்ந்து பதிவு செய்யப்படும் மனுக்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி