மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

75பார்த்தது
மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதை சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ரூ. 1, 00, 000 ரொக்கம், பாராட்டுப்பத்திரம் மற்றும் பதக்கத்தினை உள்ளடக்கியதாக இருக்கும். 2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற 15. 08. 2023 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக 15 வயது முதல் 35 வயது வரையுள்ள தகுதிகள் உள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் மாதம் 2022 அன்று (01. 04. 2022) 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் 31. 03. 2023 அன்று 35 வயதுக்குள்ளவராக இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் அதாவது 01. 04. 2022 முதல் 31. 03. 2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (அதற்கான சான்று இணைக்கப்பப்பட வேண்டும்). விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இந்த விருதிற்கு விண்ணப்பிக்க www. sdat. tn. gov. in என்ற முகவரியில் விண்ணப்பங்கள் உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம். 31. 5. 2023 மாலை 4 மணி ஆகும் என்று சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்து உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி