மணிவிழுந்தான் ஊராட்சி தெற்கு மணிவிழுந்தான் பாலத்தில் இருந்து தேவியாக்குறிச்சி, ரயில்வே கேட்,
பாரதியார் கல்லூரி வழியாக மெயின் ரோடு வரை உள்ள ஊராட்சி சாலையை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி ரூ. 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட துணை செயலாளர் சின்னதுரை மற்றும்
திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.