ஆத்தூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உடைத்து சேதம்

75பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லியகரை பகுதி தம்மம்பட்டி செல்லும் சாலையில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பழமையான இக்கோவிலில் தகரத்தால் கூடாரம் அமைத்து அம்மனை வழிபட்டு வந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குலதெய்வமாக வழிபட்டு வரும் நிலையில் மர்ம நபர்கள் கோவிலை இடித்து முழுவதும் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த பொதுமக்கள் மல்லியகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் குலதெய்வமாக வழிபட்டு வரும் கோவிலை சேதப்படுத்திய நபர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி