சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் கடந்த மே மாதம் 28ஆம் தேதி தனது செல்போனை தெடாவூர் மாரியம்மன் கோவில் அருகே தவறி விட்டுள்ளார். இதனையடுத்து, போலீஸாரிடம் புகார் அளித்ததையடுத்து, போலீசார் CEIR என்ற லொகேஷன் செயலி மூலம் செல்போன் எங்கு உள்ளது என்பதைக் கண்டுபிடித்து நேற்று (ஜூலை 9) உரியவரிடம் ஒப்படைத்தனர்.