ஆத்தூர் அருகே வாழை மரம் விழுந்து விவசாயி சாவு

1543பார்த்தது
ஆத்தூர் அருகே வாழை மரம் விழுந்து விவசாயி சாவு
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 69). விவசாயி. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டின் முன்புறம் உள்ள வாழை மர தோட்டத்தில் கட்டில் போட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார் அப்போது திடீரென வாழை மரம் முறிந்து செல்லமுத்து மீது விழுந்தது. இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி