நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி அருகே தண்டவாளத்தில் ஆர்டிஓ அதிகாரியும், அவரது மனைவியும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லைபுரத்தைச் சேர்ந்த ஆர்டிஓ சுப்ரமணியன் (54), மனைவி பிரமிளா ஆகியோர் உடல் துண்டான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.