சபரிமலையில் பழைய கெட்டுப்போன அரவணை பாயாசம் பிரசாதம் வரவிருக்கும் சபரிமலை சீசனுக்கு முன்பே அழிக்கப்படும். இதற்கான டெண்டருக்கு தேவசம் போர்டு ஒப்புதல் அளித்துள்ளது. அரவணையில் பயன்படுத்தப்படும் ஏலக்காயில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி மருந்து இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், அதனை மனுதாரரால் நிரூபிக்க முடியவில்லை. இதனால் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த சமயத்தில் விற்பனை செய்யப்படாத அரவணை தேக்கமானதால் சபரிமலை தேவசம் போர்டுக்கு ரூ.7.80 கோடி இழப்பு ஏற்பட்டது.