சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ், தலைவராக இருக்கும், மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடியை காணவில்லை என்றும், அதில் முதலீடு செய்தவர்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக நாங்கள் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.