மத்திய அரசிடம் இருந்து ரூ.2.63 லட்சம் கோடி வராமல் உள்ளது!

58பார்த்தது
மத்திய அரசிடம் இருந்து ரூ.2.63 லட்சம் கோடி வராமல் உள்ளது!
மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை, மாநிலத்திற்கு வழங்கும் பங்களிப்புத் தொகை என ரூ.2.63 லட்சம் கோடி வராமல் உள்ளது. இது தமிழ்நாட்டின் மீதான கடனில் 32% ஆகும். மத்திய அரசு உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு கருணை காட்டுவது போல தமிழ்நாட்டிற்கு நிலுவை தொகையை கொடுத்து கருணை காட்டினால் நிதி நெருக்கடி தமிழ்நாடு அரசுக்கு இருக்காது என சட்டப்பேரவையில் தமிழ்நாடு கடன் குறித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேசியதற்கு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி