புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கவுள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 30ஆம் தேதி தொடங்கவுள்ளார். மாணவிகளின் விவரங்கள் ஆராய்ந்து, யார் தகுதி வாய்ந்தவர் என்பது முடிவு செய்யப்பட்டு, மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.