பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் ரூ.1000 அபராதம்

53பார்த்தது
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் ரூ.1000 அபராதம்
திண்டுக்கல்: பழனியில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், “அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத் துறையிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். அன்னதானம் வழங்க பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தக் கூடாது. அன்னதானம் வழங்கிய பின் சம்பந்தப்பட்ட இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி