கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பலன் பெறாதவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் விரிவாக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்கையில் அறிவித்தார். இந்நிலையில், அரசு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ரூ.13,807 ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை பலன்பெறாதோருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.