தமிழக அரசின் வரவேற்பு பெற்ற திட்டங்களில் முதன்மையானதாக இருப்பது மகளிர் உரிமைத் தொகை திட்டம் தான். இத்திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாதம் ரூ.1000 வரவு வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக் கணக்குக்கு பணம் வந்து சேருவதை தமிழக அரசு உறுதிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்.15) காலை 9 மணிக்கு மேல் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்.