தஞ்சாவூர்: கும்பகோணம் சுவாமிமலை அருகே பிரபல ரவுடி காளிதாஸ் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருவலஞ்சுழி பகுதியில், ஜாமினில் வெளியே வந்த பிரபல ரவுடி காளிதாஸ், வீட்டு வாசலில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காளிதாஸின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.