இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமை போதிய அளவுக்கு கையிருப்பில் உள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். பருப்பு உள்ளிட்ட தானியங்களும் தேவையான அளவு இருப்பில் உள்ளதாக கூறினார். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிலவும் சூழலில் அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முன்னதாக பெட்ரோல், கேஸ் தட்டுப்பாடு ஏற்படாது என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்தது.