சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் அதற்கான விவாதம் தொடங்கியது. இதற்கு ஓ. பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு 35க்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்ததால் விவாதம் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பு கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஓபிஎஸ் தரப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.