பஞ்சாப்பின் அமிர்தசரஸில் நீடிக்கும் ‘ரெட் அலர்ட்'

64பார்த்தது
பஞ்சாப்பின் அமிர்தசரஸில் நீடிக்கும் ‘ரெட் அலர்ட்'
பஞ்சாப்பின் அமிர்தசரஸில் 'ரெட் அலர்ட்' தொடர்ந்து நீடிக்கிறது. மக்களின் வசதிக்காக மின்சார விநியோகத்தை மீட்டெடுத்துள்ளதாகவும், ஆனால் இன்னும் சிவப்பு எச்சரிக்கையில்தான் இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சைரன்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்பதால் யாரும் தயவுசெய்து வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் ஜன்னல்களுக்கு அருகே யாரும் நிற்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. யாரும் அச்சப்பட வேண்டாம் என அமிர்தசரஸ் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி