தொண்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய் மர படகு போட்டி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டியில் மகா சக்தி புரம் பகுதியில் அருள்மிகு கடல் சூழ்ந்த மாரியம்மன் திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா மற்றும் கங்காதேவி பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்றது.
இந்த படகு போட்டி கடந்த 16 வருடத்திற்கு பிறகு இப்பகுதியில் நடை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் 25 படகுகள் கலந்து கொண்டன மதியம் 2 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை வரை நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற முதல் நான்கு இடங்களில் பிடித்தவர்களுக்கு விழா குழுவின் சார்பில் பணமும் கேடயமும் வழங்கபட்டது. கடற்கரை பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தார்கள்