திருவாடானை பெரிய கோவில் வைகாசி விசாக திருவிழா

75பார்த்தது
திருவாடானை பெரிய கோவில் வைகாசி விசாக திருவிழா மூன்றாம் நாள் வீதி உலாவில் பூதவாகனம், மயில், காமதேனு, மூஞ்சூரு, கேடக வாகனத்தில் வீதி உலா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் வரலாற்றுச் சிறப்புடன் கம்பீரமாக ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட  அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் கோயில் வைகாசி விசாகப் பெருவிழா மே 31ம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்ற வருகிறது. வீதி
உலாவில் விநாயகர் மூஞ்சூறு வாகனத்திலும், அதனை தொடர்ந்ந்து முருகபெருமான் மயில்வாகனத்திலும்,
சண்டீகேஸ்வரர் கேடக வாகனத்திலும், ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடன் புத வாகனத்திலும்,   சினேகவல்லி அம்பாள் காமதேனு வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி  மேல தாளம் முழங்க வானவேடிக்கையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இருபத்தி இரண்டரை நாட்டார்கள் சுவாமி வாகனங்களை இழுத்து வந்து கோவிலை அடைந்தனர். திருவாடானை நகர் வளர்ச்சி அறக்கட்டளை மற்றும் உபயதாரர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு கழித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி