ஆர். எஸ். மங்கலம் அருகே வேனில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ குட்கா பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் அருகே புல்லமடை கிறிஸ்துவ ஆலயம் பகுதிகளில் அதிகாலையில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக சந்தேகத்துக்கிடமாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த வேனில் அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது.
இதனையடுத்து அதனை பறிமுதல் செய்து கடத்தி வந்த கோழியார்கோட்டை பகுதியை சேர்ந்த சித்திரவேல் மற்றும் புல்லமடை மேற்கு தெரு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோரை கைது செய்த போலீஸார் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.