தொண்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் பசு மாடு உயிரிழந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது படையாச்சி தெருவில் மின் கம்பி அறுந்து கீழே விழுந்தது. அந்த வழியாகச் சென்ற பசு மாடு மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ஊராட்சி நிா்வாகம் இறந்த மாட்டின் உடலை அப்புறப்படுத்தினா்.