திருவாடானையில் 10. 5 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தெற்கு தெருவில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அதன் மாநில செயற்குழு உறுப்பினர் தளபதிராஜ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன கோசம் எழுப்பினார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவாடானை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.