முதுகுளத்தூர் பேருந்து நிலைய வளாகத்தில் மூம்மொழிக் கொள்கைக்கு எதிராக 'ஒரே இலக்கு! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! ' என்ற லட்சியத்தை முன்வைத்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று (மார்ச். 12) நடைபெற்றது. இதில் திமுக தலைமை கழக பேச்சாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேசிக் கொண்டிருந்த போது மயங்கினார். அருகில் இருந்த திமுக நிர்வாகி கருப்பையா குடிநீர் வழங்கி விசிறி வீசி இளைப்பாற வைத்தார்