மண்டபம் ஒன்றியம் கரையூர் துவக்கப்பள்ளி இல்லம் தேடிக் கல்வி மையங்களின் சார்பில் வீரமங்கை வேலு நாச்சியார் அகவை தின விழா இன்று நடந்தது. தலைமையாசிரியை மெர்சி ஆஞ்சலா தலைமை வகித்தார். வேலு நாச்சியாரின் வீரம், தீரம் குறித்து இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் லியோன் பேசினார்.
வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாற்றிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டு பதிலளித்த மாணாக்கருக்கு பரிசு வழங்கப்பட்டது.