பெரியபட்டினம் கால்பந்தாட்ட குழு சார்பில் மாநில அளவிலான எழுவர் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. பெரியபட்டினம் கால்பந்தாட்ட வீரர் சுகைல் நினைவாக நடந்த இந்த போட்டிகளில் மாநில அளவில் 40 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் பெரியபட்டினம் ஏ அணியும், குப்பன்வலசை ஜூனியர் அணியும் மோதினர். அதில் 2-1 என்ற கோல் கணக்கில் பெரியபட்டினம் ஏ அணி வென்று முதல் பரிசை தட்டிச் சென்றனர்.