ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது எஞ்சின் கோளாறு காரணமாக படகு இலங்கை கடற்பகுதிக்குள் சென்றது. இதனை கண்ட இலங்கை கடற்படையினர் படகை சோதனை செய்தனர். படகு எஞ்சின் கோளாறு காரணமாக வந்தது தெரிந்த நிலையில் படகில் தத்தளித்து கொண்டிருந்த 4 மீனவர்களை பத்திரமாக மீட்டு படகு எஞ்சின் கோளாறை சரிசெய்து ராமேஸ்வரம் அனுப்பி வைத்தனர்