ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடி துறை முகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர் அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்து ஒரு படகையும் அதிலிருந்து 11 மீனவர்களின் சிறை பிடித்து சென்றனர் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை காங்கேயன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மத்தில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது