ராமேஸ்வரத்தில் இருந்து 420 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வழக்கம்போல இந்தியா - இலங்கை எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு, ஐந்து கப்பல்களில் ரோந்து சென்ற இலங்கைக் கடற்படை வீரர்கள், துப்பாக்கிகளைக் காட்டி எச்சரித்து, இந்திய மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். பீதியடைந்த மீனவர்கள், அவர்களிடம் கைதாவதில் இருந்து தப்பிக்க, கடலில் வீசிய வலைகளை படகில் அவசரமாக இழுத்துவைத்தபடி, படகுகளுடன் நாலாபுறமும் சிதறினர். ஆனால், 20க்கும் மேற்பட்ட படகுகளின் மீனவர்கள் வலைகளை இழுக்க தாமதமானதால் பீதியில் அவற்றை வெட்டி மூழ்கடித்துவிட்டு வெறும் படகுகளுடன் கரைக்குத் திரும்பினர்.