இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்; ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

69பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்து மூன்று மீனவர்களையும் சிறைபிடித்து காங்கேசன்துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் விசாரணைக்குப் பின்பு நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் மிகுந்த அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி