ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று (ஏப்-14) உற்சவர் சன்னதியின் அருகே தமிழ் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. இதில் புதிய வைரஸ் கிருமிகள் உருவாகும், தமிழக கடற்கரையில் மாவட்டங்களில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்யும், மருத்துவத்தில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.