இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் இராமலிங்க பிரதிஷ்டையை முன்னிட்டு நாளை (ஜூன். 04) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் சிரமத்தை கருதி முன்கூட்டியே அறிவித்துள்ளது. எனவே நாளை கோயிலுக்கு வர இருக்கும் பக்தர்கள் மற்ற நாட்களில் வந்து வழிபடலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது