கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு மீன்பிடி படகு, 3 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களை விடுவிக்கக் கோரி 400க்கும் மேற்பட்ட பெரிய விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இரண்டாவது நாளாக அடையாள நிறுத்தம் செய்கின்றன. 143 சிறிய விசைப்படகுகள் வழக்கம்போல் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றது குறிப்பிடத்தக்கது.