இராமேஸ்வரம் மீனவர்களுக்கு அபராதம் விதிப்பு

74பார்த்தது
இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 19ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 2 விசைப்படகுகளுடன் 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி நளினி சுபாஸ்கரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி படகு ஓட்டுனர்கள் இருவருக்கும் தலா 6 மாத சிறை தண்டனையும், ரூ. 40 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மற்ற 4 மீனவர்கள் விடுதலையாகினர்

தொடர்புடைய செய்தி