இலங்கை தமிழர்களுக்கு உணவு வழங்குவது. நிறுத்தம்

54பார்த்தது
மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கை தமிழர்களுக்கு உணவு வழங்குவது. நிறுத்தம்

கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பெரிதும் பாதித்த இலங்கை தமிழர்கள் அகதிகளாக இந்தியா திரும்பினார். இந்தியா வந்த அகதிகள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் உள்ள தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு முகாமில் கடந்த 3 ஆண்டுகளா தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு தங்கியுள்ள சிறுவர்கள், பெண்கள் என 100 பேர் உள்பட 300 க்கும் மேற்பட்டோருக்கு தினமும் 3 வேளை உணவு தனியார் மூலம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தனியாருக்கு வழங்க வேண்டிய உணவுத் தொகை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படவில்லை. இதனால் இன்று காலை முதல் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிகாரிகளின் கவனக்குறைவால் இலங்கை தமிழர்களுக்கு உணவு வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக உணவு வழங்கிவரும் தனியாருக்கு பணம் முறையாக பட்டுவாடா செய்யாத காரணத்தினால் இன்று உணவு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் முறையான ஆய்வு செய்து இலங்கை தமிழர்களுக்கு உணவு வழங்குவதில் உள்ள குறைபாட்டை நீக்கி மீண்டும் அவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இலங்கை தமிழர்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி