காற்றுடன் மழையால் மின்தடை: மக்கள் அவதி.!

65பார்த்தது
காற்றுடன் மழையால் மின்தடை: மக்கள் அவதி.!
ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் இரவு, காலை முதல் மாலை வரை மிதமான மழையும், தொடர்ந்து பலத்த காற்று காரணமாக 2 மணி நேரம் மின்தடையால் சிரமப்பட்டனர். தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரண்டு நாட்களாக பலத்த காற்றும் மிதமான சாரல் மழையும் பெய்துள்ளது.

அதிகபட்சமாக திருவாடானையில் 68 மி. மீ. , தொண்டி - 88 மி. மீ. , ஆர். எஸ். மங்கலம் - 42 மி. மீ. , பரமக்குடியில் 18. 80 மி. மீ. , என மாவட்டம் முழுவதும் 300 மி. மீ. , மழை பதிவாகியுள்து. இதனால் பஸ்ஸ்டாண்ட் ரோடு, அரண்மனை சந்தை ரோடு பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. ஆர். எஸ். மடை துணை மின்நிலைய மின்வினியோகம் பாதிப்பால் நேற்று காலை 7: 20 முதல் 9: 20 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் சிரமப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி