ரூ. 3. 5 கோடியில் ராமேஸ்வரம் கோவிலில் துாண்கள் புதுப்பிப்பு

52பார்த்தது
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் 17ம் நுாற்றாண்டில் பிரகாரங்கள், ராஜ கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இக்கோவிலின் 3ம் பிரகாரம் தான் ஆசியாவில் மிக நீளமானது. இங்கு 2, 3ம் பிரகாரம் துாண்கள், 3ம் பிரகாரத்தில் அதிஷ்டானம் பகுதியில் சிற்பங்கள் சேதமடைந்துள்ளன.

இதை பழமை மாறாமல் புதுப்பிக்க, சென்னை உயர்நீதிமன்ற கமிட்டியின் வழிகாட்டுதலின் படி, 3. 50 கோடி ரூபாயில் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்களின் கலவை பூசும் பணி சில மாதங்களாக நடக்கிறது.


இதில் 3ம் பிரகாரத்தில் 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இன்னும் இரு மாதங்களில் அனைத்து பணிகளும் முடிவடையும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி