இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள்; ஒருவர் கைது
மண்டபம் வனத்துறையினர் காலை வடக்கு கடலோர பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் ஒருவர் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிளாஸ்டிக் கேனில் வைத்து கடத்திச் சென்றார்.
அவர் மண்டபம் பகுதியைச் சேர்ந்த செய்யது மகன் தாரிக் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்