மண்டபம் தெற்கு கடற்கரையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை நேற்று இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதனை கண்டித்தும், மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும் மண்டபம் (தெ)கடற்கரை பகுதியில் மீனவர்கள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்